Tuesday, March 04, 2008

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை : விஜய்

அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்ல என்ற விஜய், தமிழக மக்களுக்கு தாம் தொண்டனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்.

தனது தங்கை வித்யா நினைவாக, தர்மபுரியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய், 'தங்கை வித்யா இறந்தபோது தனிமையை உணர்ந்த நான், நடிகனான பிறகு அதிலிருந்து மீள முடிந்தது.எனக்கு வரும் பெரும்பாலான ரசிகர் கடிதங்கள் 'அன்புள்ள அண்ணா' என்றே வருகின்றன' என்றார்.

இன்று தொடங்கும் பிளஸ் டூ தேர்வில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த விஜய், 'கல்வி கண் போன்றது, கல்வி இருந்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகைக் காணலாம்' என்று கூறினார்.

ஈரோட்டில் நடந்த மன்ற விழாவில், விரைவில் மன்றத்திற்கான தனிக்கொடி அறிமுகப்படுத்துவேன் என்று விஜய் கூறியது, பல அரசியல் வதந்திகளை கிளப்பியது.

இந்நிலையில், தர்மபுரி விழாவில் மன்றக் கொடி அறிமுகப்படுத்துவதை உறுதி செய்த விஜய், 'இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்புமில்லை, தமிழக மக்களுக்கு நான் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறி வதந்திக்கு வைத்தார் முற்றுப்புள்ளி!

Source : Yahoo News

No comments: