Sunday, March 16, 2008

Trisha's interview on Kuruvi

செனடாப் சாலையில் இருக்கும் த்ரிஷாவின் வீடுகூட அத்தனை அழகாக இருக்கிறது! "நேத்துதான் 'லேசா லேசா' படத்துல அறிமுகமான மாதிரி இருக்கு.அந்தப் படத்துக்கான விமர்சனங்களில் என்னைப்பத்தி வந்த வரிகளும் இன்னும் ஞாபகimageம் இருக்கு! இன்னிக்கு த்ரிஷான்னா ஒரு நல்ல நடிகைனுபேர் சொல்லும்படியான படங்கள் பண்ணி யிருக்கேன். ஆனா, எனக்கு இதெல்லாம் போதாது. இன்னும் பெரிசா ஏதாவது சாதிக்கணும். அதை நானே ரசிச்சு அனுபவிக்கணும்!"

என்ன சொல்லுது 'குருவி'?

''இப்போதான் விஜய்யோடு மலேசியாவில் செமத்தியான டூயட் முடிஞ்சுது.இன்னும் அந்த டான்ஸ் மூவ்மென்ட்ஸ் உள்ளுக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு.எனக்கு தரணி ரொம்ப ஃப்ரெண்ட். விஜய் பத்திச் சொல்லவே வேண்டாம்.
அப்படியே திரும்பவும் 'கில்லி' ஸ்பாட்டுக்குப் போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்!

எங்க கில்லி கேங்க்ல இப்ப புரொடியூஸர் உதயநிதி சார் புது மெம்பர். 'தான்எவ்ளோ பெரிய வி.ஐ.பி'ங்கிற பந்தா துளிகூடக் கிடையாது அவர்கிட்டே!சகஜமா பழகுவார். எந்த அதிகார தோரணையும் கிடையாது. ரொம்ப ரொம்பஎளிமையானவர். திட்டம் போட்டுப் பரபரப்பாகவும், அதேசமயம் ஜாலியாகவும்பறந்துகிட்டு இருக்கு 'குருவி'.''

''மனம் திறந்து சொல்லுங்க, உங்களுக்குச் சரியான ஜோடி யாரு சினிமாவில்?''

''ஒரு சமயம் சித்தார்த் தான் 'பெஸ்ட்'னு சொன்னாங்க. 'சாமி', 'பீமா' பார்த்துட்டு சாமிதான் மாமிக்கு ஏத்த ஜோடின்னு சொன் னாங்க. 'அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம்' பாட்டுல எனக்கும் அஜீத்துக்கும் அத்தனை கெமிஸ்ட்ரினு ொன்னாங்க.எனக்கும் விஜய்க்கும் ஆட்டத்தில் பொறி பறக்கும் கிறது எல்லாருக்குமே தெரியும்.மத்தபடி, உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை. நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே நான் ஏத்துக்கிறேன். சரியா?''

Full article

No comments: